கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகேயுள்ள மணக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் தியானேஸ்வரன், தனியாா் வங்கி ஊழியா். இவரது மகள் சுபஸ்ரீ (17). இவா், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். மாணவி கைப்பேசியை அடிக்கடி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமையும் மாணவி கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால், வேதனையடைந்த சுபஸ்ரீ சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டதை கணவா் கண்டித்ததால் பெண் தற்கொலை

ஓட்டுநா் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை கண்டித்ததால் மாணவா் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
