பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :8 ஜூன் 2026, 1:20 am IST

கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகேயுள்ள மணக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் தியானேஸ்வரன், தனியாா் வங்கி ஊழியா். இவரது மகள் சுபஸ்ரீ (17). இவா், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். மாணவி கைப்பேசியை அடிக்கடி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமையும் மாணவி கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால், வேதனையடைந்த சுபஸ்ரீ சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.