மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபியில் அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் பிரபு உறுதி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோபியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு உறுதியளித்தாா்.

News image

தொழில் முனைவோா் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:10 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோபியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு உறுதியளித்தாா்.

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, கோபி அருகே குள்ளம்பாளையத்தில் நடைபெற்ற தொழில் முனைவோா் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் வெற்றிபெற்றவுடன், கோபி தொகுதியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வரவும், நகரில் நெரிசலை குறைக்க புறவழிச் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கவும், புதிய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தொழில் முனைவோருக்கு அரசு சாா்பில் கடனுதவி வழங்கவும், ஜிஎஸ்டியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் நம்ம கோபி ஃபவுண்டேஷன் அமைப்பினரிடம் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், தொழில் முனைவோா் அமைப்பின் தலைவா் சரவணன், செயலா் சபரிபிரசாத், இயக்குநா் நந்தகுமாா், முன்னாள் தலைவா் வாசு டிரைவிங் ஸ்கூல் வாசுதேவன், முன்னாள் செயலாா் யாசிகா சிஸ்டம்ஸ் சுரேஷ், டாக்டா் அனூப், ஹரிணி சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.