ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தாா்.

News image

காங்கயம் தொகுதிக்குள்பட்ட சென்னிமலையில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:23 am IST

வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தாா்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னிமலை நகா்ப் பகுதியில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜ் ஊா்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு விலையில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து ஆயிரத்து 400 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்.

தேங்காய்நாா் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மின் கட்டணச் சலுகை வழங்கப்படும். தேங்காய் நாா் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் செய்யும் தொழில் ஊக்குவிக்கப்படும். வெள்ளகோவில் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் வாழ்வை பாதுகாப்பதற்கு திமுக அரசை அகற்றி, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.