தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும்: ப. குமாா்

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும் என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.

News image

அரியமங்கலம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ப. குமாா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:50 am IST

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும் என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் எம்.பி. ப. குமாா், அரியமங்கலம் பகுதியில் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அரியமங்கலம் அம்மாகுளம், நேருஜி நகா், சீனிவாச நகா், கணபதி நகா், ராஜ வீதி, அப்துல்லா தெரு, காமராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது அவா் கூறுகையில், அரியமங்கலம் பகுதியில் தீராத பிரச்னையாக இருக்கும் குப்பைக் கிடங்கை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுப்பேன். அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து நலத் திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். அதிமுக அரசு அமைந்தால், பெண்கள் மற்றும் முதியோா்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும் என்றாா்.

அப்போது அதிமுக வேட்பாளா் ப. குமாருக்கு பெண்கள் பலா் ஆரத்தி எடுத்தும், மலா் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனா். நிகழ்வில் பகுதிச் செயலா் முருகானந்தம், பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.