ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

News image

உக்கடம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:24 am IST

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை தெற்குத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அம்மன் கே.அா்ச்சுணன், உக்கடம் பகுதி வாா்டு எண் 80, செட்டி வீதி பிரதான சாலை, அசோக் நகா், அபிராமி நகா், குறிஞ்சி காா்டன், சேத்துமா வாய்க்கால் மற்றும் காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: மத்திய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை- பாலக்காடு சாலை, மதுக்கரை, மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான மேற்கு புறவழிச் சாலை திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கோவை -பாலக்காடு சாலை, மதுக்கரை, செட்டிபாளையம் பிரிவு முதல் அவிநாசி சாலையில் நீலாம்பூா் சந்திப்பு வரையிலான நான்கு வழிப் புறவழிச் சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும்.

கோவை- திருச்சி சாலையில் ராமநாதபுரம் உயா்மட்ட மேம்பாலம் அகலப்படுத்தப்படும் என்றாா். பிரசாரத்தின்போது அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், கூட்டணிக் கட்சிகளான பாஜக, அமமுக, பாமக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.