மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

News image

அம்மன் கே.அா்ச்சுணன்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:49 am IST

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம் பகுதியில் 66-ஆவது வாா்டு கொண்டசாமி லே-அவுட், புலியகுளம், அண்ணா நகா் 1 முதல் 3-ஆவது வீதி வரை, அம்மன்குளம் வடக்கு பகுதி, ஜி.ஹெச் காலனி 1, 2 -ஆவது வீதி, ராஜீவ் நகா், பழைய ஹவுஸிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், மக்கள் படும் கஷ்டத்தை நாங்கள் அறிவோம். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீா் வரி போன்ற பல வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அனைத்து அரசுத் திட்டங்களும் உடனடியாக மக்களைச் சென்றடைய பாடுபடுவேன் எனறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.