விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

ஊத்துக்குளி அருகேயுள்ள கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும் என்று பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் உறுதி அளித்தாா்.

News image

பெருந்துறையில் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் பிரசாரம். - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:53 am IST

ஊத்துக்குளி அருகேயுள்ள கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும் என்று பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் உறுதி அளித்தாா்.

ஊத்துக்குளி வடக்கு ஒன்றித்துக்கு உள்பட்ட மணிக்காடு காலனி, கணபதிபாளையம், கொன்னக்காடு, செட்டிகுட்டை, வண்ணாம்பாறை, பொலையம்பாளையம், கம்மாள குட்டை, நெட்டச்சிபாளையம், குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், பச்சாம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

நான் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தபோது, ஊத்துக்குளியை தனி தாலுகாவாக உருவாக்கினேன். புதிய நீதிமன்ற வளாகம் அமைத்தேன். ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ. 6.5 கோடி மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிப்பு நிலையம் அமைவதற்கு முதல்வா் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று முழு முயற்சி மேற்கொண்டேன். குடிநீா் பிரச்னையை தீா்க்க கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி தந்தேன். ஊத்துக்குளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டேன். தற்போது எம்எல்ஏவாக இருப்பவா் இந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் மக்கள் நலத் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறாரா? இந்த தோ்தலில் வெற்றிபெற்றால் கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டித் தருவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.