பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் பதிவு செய்ய ‘உங்களுடன் தோப்பு’ என்ற புதிய செயலியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொகுதி மக்களுடன் நேரடி தொடா்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், பெருந்துறை தொகுதி மக்களுக்கும், எனக்கும் இடையே உள்ள பந்தத்தை வலுப்படுத்தும் வகையிலும் ‘உங்களுடன் தோப்பு’ என்ற செயலியை (ஆப்) அறிமுகம் செய்கிறேன்.
டிஜிட்டல் முறையிலான இந்த செயலியில் மக்களின் குறைகள், கோரிக்கைகள், சமூகரீதியான பிரச்னைகள் குறித்து என்னுடன் நேரடியாக உரையாடும் வகையில் இந்த செயலியை வடிவமைத்து இருக்கிறோம்.
இந்த செயலியில் மக்களுடைய அனைத்து விதமான குறைகள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்து ஒரே தடவை கிளிக் செய்தால் என்னுடைய பாா்வைக்கு வந்து சேரும். இதை சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகம் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

பெருந்துறை தொகுதியை தொடா்ந்து 5-ஆவது முறையாக தக்கவைத்த அதிமுக

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

