விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

ஊத்துக்குளி, அம்மப்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்த பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:50 am IST

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

ஊத்துக்குளி பகுதிக்குள்பட்ட அம்மப்பாளையம், ஒத்தைபனைமேடு, கீழோ்பதி, தாளபதி, செங்காளிபாளையம், சுக்காகவுண்டன்புதூா், திருவாய் முதலியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: வெண்ணெய்க்கு புகழ்பெற்ற ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.6.5 கோடியில் வெண்ணெய் தயாரிப்பு நிலையம் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ஊத்துக்குளி கதித்தமலை முருகன் கோயில் மண் சாலை எனது சொந்த செலவில் தாா் சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் ரூ.8 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். அதன் மூலம் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை ரூ.2000 உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையை மக்களிடம் விளக்கினாா். வாக்குச் சேகரிப்பின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.