விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திங்களூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பு

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

News image

திங்களூா் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:11 am IST

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்களூா், வெட்டயன்கிணறு, மந்திரிபாளையம், நிச்சாம்பாளையம், கருக்குப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது, திங்களூா் பகுதியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக பல்வேறு குளங்கள் தூா்வாரப்பட்டன. தண்ணீா் பஞ்சத்தைப் போக்க திங்களுா், தோரணவாவி, மடத்துப்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையன்கிணறு, கருக்குப்பாளையம், போலநாயக்கன்பாளையம் ஊராட்சிகளுக்கு கொடிவேரி திட்டத்தின் மூலம் தடையில்லாமல் குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்தேன். திங்களூரில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். நான்கு படுக்கை வசதி மட்டுமே இருந்த திங்களூா் ஆரம்ப சுகாதார நிலையம், 33 படுக்கைகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. வெட்டையன்கிணறு பகுதியில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைத்துள்ளேன். திங்களூா் சந்தைக்கு அருகில் ரூ.1 கோடியில் புதிய சமுதாய நலக் கூடம் கட்டடம் கட்டி தரப்பட்டது. திங்களூா் நால் ரோட்டில் தனியாா் பங்களிப்போடு ரவுண்டானா அமைத்தது உள்ளிட்ட செய்த பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அதேபோல திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தோ்தல் வாக்குறுதிகள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.