தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

News image

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட தொட்டம்பட்டியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:51 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கேட்டுக்கொண்டாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பனியம்பள்ளி, வாய்ப்பாடு, சிறுகளஞ்சி, தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுபுதூா், எம்.பி.என்.காலனி, தோப்புபாளையம், வாய்ப்பாடிபுதூா், எளையம்பாளையம், சுள்ளிமேடு, காளிபாளையம், ஆலம்பாளையம், கூத்தம்பாளையம், தொட்டியவலசு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியாதவது:

2011 முதல் 2021 வரை பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், அமைச்சராக இருந்தபோதும் பெருந்துறை சிப்காட் பகுதியில் தேங்கிக் கிடந்த 50 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றப்பட்டன. அங்கு ரூ.2 கோடி மதிப்பில் காற்று மாசை கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டது.

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க முயற்சி மேற்கொண்டேன்.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி மகளிா் உரிமைத் தொகை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.