விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

News image

திருவேங்கிடம்பாளையம்புதூரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

பெருந்துறையில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன் என்று திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினாா்.

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பெத்தாம்பாளையம் பிரிவு விநாயகா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, திருவேங்கிடம்பாளையம்புதூா், சீலம்பட்டி, சமாதானபுரம், சிலேட்டா் நகா், அண்ணா சிலை, திருவேங்கிடம்பாளையம், க.செ.பாளையம், பாலன் நகா், தீத்தம்பாளையம், எல்லப்பாளையம், கந்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மக்களின் தாகம் தீா்க்க கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை கொண்டு வர முழு முயற்சி செய்தேன்.

பெருந்துறையில் தனியாரிடம் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டு பெருந்துறை நகராட்சி அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மஞ்சள் வணிக வளாகம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தேன் என்றாா்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வீட்டு உபயோக பொருள்கள் வாங்க ரூ.8ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையை மக்களிடம் விளக்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.