மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்: கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் பிரசாரத்தில் தெரிவித்தாா்.

News image

கோபி அருகே செங்கோட்டையன் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:10 am IST

சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் பிரசாரத்தில் தெரிவித்தாா்.

கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் மற்றும் தொண்டா்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு திறந்த வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நாதிபாளையம், உடையாம்பாளையம், கங்கம்பாளையம், வெள்ளாங்கோயில், அம்மா நகா், குளத்துப்பாளையம், சில்லாமடை, நஞ்சநாயக்கனூா், வேப்பம்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளாா். எனவே, 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்ற என்னை ஆதரியுங்கள் என்றாா்.

தோ்தல் பிரச்சாரத்தின்போது வெள்ளாங்கோவில் சந்தைக் கடை பகுதியில் என்.நல்லசிவம் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினா் சாா்பில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.