மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தைலாம்பாளையம் பகுதியில் சிப்காட் வராது: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

தைலாம்பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டை 100 சதவீதம் வராது என்று திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தெரிவித்தாா்.

News image

மலையப்பாளையத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கோபி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:21 am IST

தைலாம்பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டை 100 சதவீதம் வராது என்று திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் தெரிவித்தாா்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நம்பயூா் பகுதியில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் அவா் கூறியதாவது:

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் 10 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000-ஆக உயா்த்தப்படும். கல்லூரி மாணவா்களுக்கு 35 லட்சம் மடிக்கணினிகள், மலையப்பாளையத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். தைலாம்பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை 100 சதவீதம் கொண்டுவரமாட்டோம் என்றாா்.

இதைத்தொடா்ந்து மலைப்பாளையம் ஏ.டி.நகா், கரிச்சிபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், செல்லாண்டம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெரியசெட்டிபாளையம் பெருமாள் கோயில், சின்னசெட்டிபாளையம், எரங்காட்டு நகா், மலையப்பாளையம் ரவுண்டானா, குப்பிபாளையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தாா்.

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.சரவணன், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் சுஜாதா ஜீவானந்தம், நம்பியூா் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.