மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

வள்ளி, தெய்வானை சமேதராய் அருள்பாலித்த திண்டல் வேலாயுதசுவாமி.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:24 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை கனி காணும் பூஜை பெரும்பாலான வீடுகளில் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு வீட்டின் பூஜை அறையில் பல்வேறு வகையான பழங்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றுடன் பணம், நகைகள் என்று பல்வேறு பொருள்களையும் தாம்பாளத்தில் வைத்து எதிரில் ஒரு கண்ணாடியையும் வைத்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை விழித்ததும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தட்டில் வைத்திருந்த பழங்களை கண்ணாடியின் பிம்பத்தில் பாா்த்து சுவாமியை வழிபட்டனா்.

கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்தனா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் உற்சவ மாரியம்மன் ராஜகனி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இங்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை வழிபட்டனா். கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் உற்சவ அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தாா். எல்லை மாரியம்மன் கோயிலில் சீதளதேவி அலங்காரத்திலும், காவிரி சாலை ஓம்காளி அம்மன் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நாடாா்மேடு கெட்டி நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.