மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

திருநள்ளாறு மற்றும் நல்லம்பல் பகுதி மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நல்லம்பலில் தீமித்து நோ்த்திக்கடனை செலுத்தும் பக்தா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:08 am IST

திருநள்ளாறு மற்றும் நல்லம்பல் பகுதி மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் பகுதியில் உள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 20-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அன்ன வாகனத்தில் அம்மனை அலங்கரிக்கப்பட்டு தீக்குண்டம் அருகே எழுந்தருளினாா்.

முதல் நபராக கரகம் சுமந்த பக்தரும், பின்னா் பிராா்த்தனை செய்துகொண்ட பக்தா்கள் ஒவ்வொருவராக தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தி சீதாதேவி மகா மாரியம்மனை வழிபட்டனா். விழாவில் நல்லம்பல் கிராம மக்கள், பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மழை மாரியம்மன் கோயில் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட கீழாவூா் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த 19-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தீமிதி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீக்குழியில் இறங்கிச் சென்று அம்மனை வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை மஞ்சள் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.