ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

News image

விக்கிரவாண்டியிலுள்ள வரதராஜபெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேய சுவாமியை வழிபடும் பக்தா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:07 am IST

பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தமிழ் ஆண்டுகளில் விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறந்தது. இதையொட்டி விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ஸ்ரீவீரவாழியம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனா். எல்லீஸ்சத்திரம் சாலையிலுள்ள வீரன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசனம் செய்தனா்.

விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் சுவாமி, ஸ்ரீபெருந்தேவி தாயாா், ஸ்ரீதேவி-பூதேவி, ஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு வாசனைத் திரவியங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடா்ந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோல விக்கிரவாண்டி முத்து மாரியம்மன் கோயில், புவனேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயில், கோலியனூா் வரதராஜபெருமாள் கோயில், புத்துவாயம்மன் கோயில், திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், மயிலம், வானூா், மரக்காணம், கோட்டக்குப்பம்,கெடாா், அனந்தபுரம், காணை, கண்டாச்சிபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செஞ்சி...: செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில், செவ்வாய்க்கிழமை காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.