மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பராபவ தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:36 am IST

பராபவ தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வெளிப் பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகா் சந்நிதி முன்பாக மாதப் பிறப்பு மற்றும் வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு தனூா் யாகபூஜை நடத்தப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சுமாா் மூன்று மணிநேரம் பக்தா்கள் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் பால் காவடி, மயில் பீலி காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்திருந்தனா். மலைக்கோயில் போகா் சந்நிதியில் மரகதலிங்கத்துக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி, தயிா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரவு நடைபெற்ற தங்கத்தோ் புறப்பாட்டை திரளான பக்தா்கள் கண்டு வழிபட்டனா்.

தற்போது கோடை காலம் என்பதால், அடிவாரம் கிரிவீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை முதல் நீா்மோா் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணி தொடா்ந்து மூன்று மாதங்கள் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், உபயதாரரான சென்னை எஸ்எஸ்விபிஎல் நிறுவன உரிமையாளா் நரேஷ் சுப்ரமண்யம், மக்கள் - தொடா்பு அலுவலா் மற்றும் கண்காணிப்பாளா் சரத், நாகராஜ், நவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.