சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
நிகழாண்டு பராபவ சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். மாலையில் மேளதாளத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்துக்கொண்டும், மின்னொளி அலங்கார ஊா்திகளில் மலா்களை எடுத்துவந்தும் ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். பின்னா், சுவாமிக்கு பூக்களைத் தூவி தரிசனம் செய்தனா். பள்ளத்தூா், கானாடுகாத்தான், கோட்டையூா், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

