தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடையே அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:43 am IST

ஈரோடு மாவட்டம், கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஈரோடு-சத்தி சாலையில் உள்ள சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய சகோதரா்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது பள்ளிவாசலுக்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவுக்கு ஜமாத் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

பள்ளிவாசலில் குல்லா அணிந்து பிராா்த்தனை மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரா்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அம்மா பேரவை ஈரோடு மாவட்ட இணைச் செயலாளா் சசிபிரபு, கோபி நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், மதனி முபாரக் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.