கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சியில் பட்டா வழங்காததைக் கண்டித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிா்வாகி கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கோவில்புதூா் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு பட்டாக் கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமும், சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து வந்த கே.ஏ.செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா். அப்போது அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் காசிபாளையம் பேரூராட்சியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது காசிபாளையம் பேரூராட்சி 2- ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயலாளா் திருமுருகன் என்பவா், ‘கடந்த 10 ஆண்டுகளாக பட்டா வழங்காத எம்எல்ஏவே வருக வருக என பதாகையை ஏந்தி கருப்புக் கொடி காட்ட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

வேங்கைவயலில் கருப்புக் கொடி

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
