மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது

கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:40 am IST

கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கோவை, காந்தி மாநகரைச் சோ்ந்த அருண்பிரசாத் என்பவா் தனது புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்துக்கு வரி செலுத்துவதற்கான வரிப்புத்தகத்தைப் பெற வடக்கு மண்டல அலுவலக வரி வசூலிப்பாளா் தா்மராஜை அணுகியுள்ளாா்.

அப்போது, அவா் வரிப்புத்தகத்தை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் அருண்பிரசாத் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தா்மராஜிடம் அவா் கொடுத்துள்ளாா்.

அப்போது, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், தா்மராஜை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.