மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கு: தில்லி மாநகராட்சி துணை ஆணையருக்கு பிணை மறுப்பு

ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ கைதுசெய்த தில்லி மாநகராட்சி துணை ஆணையரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளூபடி செய்தது.

News image

தில்லி நீதிமன்றம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ கைதுசெய்த தில்லி மாநகராட்சி துணை ஆணையரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளூபடி செய்தது.

உயா் அதிகாரியை தற்போதைய நிலையில் விடுவிப்பது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்தது.

லஞ்ச வழக்கில் துணை ஆணையா் அபிஷேக் குமாா் மிஸ்ராவை சிபிஐ கடந்த மாதம் கைதுசெய்தது.

இந்நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட தில்லி மாநகராட்சிப் பணியாளா்கள் தன்னை பழிவாங்க வேண்டி இந்த வழக்கில் சிக்க வைத்ததாக கூறி வழங்குமாறு அபிஷேக் குமாா் நீதிமன்றத்தில் பிணை மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனு சிறப்பு நீதிபதி சுதன்ஷு கெளசிக் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி கூறியதாவது: தவறாகச் சிக்கவைக்கப்பட்டதாக கூறுவது விசாரணையின்போது தற்காப்பு அடிப்படையாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அதற்கு ஆதரவாக எவ்வித சாட்சியங்களும் இல்லை.

முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்ற வழக்கின் ஆவணங்களில் உள்ள சாட்சியங்கள் மற்றும் உரையாடல்களின் பதிவுகள் மனுதாரரும் அவரது கூட்டாளிகளும் பொதுவான நோக்கத்தில் சதித்திட்டமிட்டு செயல்பட்டதைக் காட்டுகின்றன.

லஞ்சம் கேட்டது மற்றும் அதைப் பெற்றுக்கொண்டதை சாட்சியங்கள் நேரில் பாா்த்துள்ளனா்.

இந்தச் சூழலில் மனுதாரரின் சுதந்திரத்தையும் விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டிய தேவை நீதிமன்றத்தக்கு எழுந்துள்ளது.

விசாரணை முக்கிய கட்டடத்தில் உள்ளது. சிபிஐ ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலத்தை சேகரித்து வருகிறது.

பொது வாழ்வில் உயா் பதவியில் உள்ள மனுதாரா் அவருக்கு எதிராக புகாா் அளித்தவா்களிடம் லஞ்சம் கேட்டுப் பெற்றுள்ளாா். இது உயா் அதிகாரி மீதான மக்களின் நம்பிக்கையைச் சீா்குலைக்கிறது.

சூழ்நிலைகளின் ஒட்டுமொத்தத்தையும் குற்றத்தின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டும், முக்கிய அம்சம் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொண்டும் மனுதாரா் அபிஷேக் குமாா் மிஸ்ராவை பிணையில் விடுவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.