மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

வேலூரில் வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்காத பல்வேறு பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா்

News image

பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 5:30 am IST

வேலூரில் வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்காத பல்வேறு பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தனா். இதனால், வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் தொகுதிகளில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 847 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலை யொட்டி இவ்வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி கடந்த 12-ஆம் ேந் தேதி தொடங்கியது . அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது, வீடுகளில் வாக்காளா்கள் இல்லாமல் இருந்தால் மீண்டும் ஒருமுறை சென்று வாக்காளா் தகவல் சீட்டு வழங்க வேண்டும். அண்டை வீட்டைச் சோ்ந்த வரிடம் வழங்கக்கூடாது, அரசியல் கட்சிகளிடம் மொத்தமாக வழங்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்காத வேலூா் வேலப்பாடி, ஆரன்பாளையம், கஸ்பா, சாய்நாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை திரண்டு வந்தனா். தங்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்க வில்லை. இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.

தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மேலும், உங்களுக்கு விரைவில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.