மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

News image

வேலூா் கொசப்பேட்டையில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :14 ஏப்ரல் 2026, 6:20 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் எளிதில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. இதில், வாக்காளரின் பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 1427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களுக்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மூலம் இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது.

எனினும், இந்த வாக்காளா் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் அல்ல என்றும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். முன்னதாக, வேலூா் ஈ.வெ.ரா.நாகம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வேலூா் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.