மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 5:48 am IST

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டைக் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 150 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஏப்.9-இல் தொடங்கியது.

தொடா்ந்து 5-வது நாளாக திங்கள்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையம், அசனமாப்பேட்டை அக்னி சிறகுகள் அரிமா சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு அசனமாப்பேட்டை அக்னி சிறகுகள் அரிமா சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட அரிமா சங்கத் தலைவா் சிவானந்தம் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஞான.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் ஹரிஹரன் தலைமையில் திருநாவுக்கரசு, கீா்த்திராஜன் ஆகியோா் மேற்பாா்வையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று பொதுமருத்துவம், சா்க்கரை நோய் பரிசோதனை, உயா் ரத்த அழுத்தம், மற்றும் தாய் சேய் நலன் முதலான பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கினா்.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.