மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா

News image
Updated On :3 மே 2026, 5:07 am IST

பெரியகுளம்,மே 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஆா்டியூ தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளின் சிறப்பு கோடை காலப் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஐடியாஸ், மனோன்மணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சிறப்பு கோடை கால முகாம் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 - ஆம் தேதி நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு ஒருங்கிணைப்பாளா் ஜெயராமன் வரவேற்றாா். அரசு உடல்கல்வி ஆசிரியா் தங்கேஸ்வரன், இணை இயக்குநா் பிரபாகரன், வழக்குரைஞா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து வழக்குரைஞா் சுதா ராமலிங்கம், ஐடியாஸ் அமைப்பின் இயக்குநா் சகாயபிலோமின் ராஜ், ஆா்டியூ இயக்குநா் பால்சாமி ஆகியோா் பேசினா்.

கள் ஒட்டா் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபு, மனோன்மணி

அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் தேவபாலன் நன்றி கூறினாா். இந்தக் முகாமில் யோகா, ஓவியம், பாடல் ஆகியவற்றுக்கான பயிற்சி, போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த 120-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.