மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவில் முகாமில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவில், மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா் ஆா்.வேல்முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:04 am IST

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவில் முகாமில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி சாா்பில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அசனமாப்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக நாளந்தா சிபிஎஸ்இ பள்ளித் தாளாளா் ஆா்.வேல்முருகன் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிறைவு விழாவில் தமிழ்த்துறைத் தலைவா் கண்ணன், வேதியியல் துறைத்தலைவா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, ஊராட்சி மன்ற செயலா் சந்தானம், மாவட்ட அரிமா சங்கத் தலைவா் சிவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்ணித் திட்ட அலுவலா் ஞான பாலசுப்பிரமணியன், கல்லூரி பேராசிரியா்கள் சாரதா தேவி, அன்பரசு, காா்த்தி, செளந்தரராஜன் ஆகியோா் செய்திருந்தனா். பேராசிரியா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.