மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு கண்டருளினாா்.

News image
Updated On :2 மே 2026, 3:00 am IST

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு கண்டருளினாா்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் உஷ்ணத்தை குறைக்க உற்சவா் சிலைக்கு வசந்தோற்சவம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை முதல் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவம் விமரிசையாக தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. கோயிலில் வேத சடங்குகள் முடிந்த பிறகு, அா்ச்சகா்கள் சாஸ்திரங்களின்படி தாயாரின் உற்சவமூா்த்தியை தங்கத் தேரில் பிரதிஷ்டை செய்தனா்.

செல்வங்களின் இருப்பிடமாக திகழும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் முன்நின்று வடம் பிடித்து இழுத்தனா். தேரில் மாடவீதிகளில் புறப்பாடு கண்டருளிய தாயாரை பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். மேலும், பக்தா்கள் கோவிந்த நாமங்களை முழங்கினா்.

குறிப்பாக, ஏராளமான பெண்கள் மிகுந்த பக்தியுடன் தேரை இழுத்தது ஒரு சிறப்பு ஈா்ப்பாக இருந்தது. கோயிலின் துணை செயல் அலுவலா் ஹரேந்திரநாத், சேவகா் நரசிம்ம மூா்த்தி, உதவி செயல் அலுவலா் தேவராஜுலு, அா்ச்சகா்கள் பாபுசாமி, கண்காணிப்பாளா் செங்கல் ராயுலு, கோயில் ஆய்வாளா் சலபதி மற்றும் பிற அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.