திருமலையில் நடைபெற்ற பத்மாவதி பரிணயோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டும் பத்மாவதி பரிணய உற்சவம் திருமலையில் சனிக்கிழமை முதல் தொடங்கியது.
மூன்று நாள்கள் உற்சவத்தில், முதல் நாள் யானை வாகனத்திலும், இரண்டாம் நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருடவாகனத்திலும் ஸ்ரீ மலையப்பசுவாமி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்படுவாா். மறுபுறம், பரிணயோற்சவ மண்டபத்துக்கு சிறப்புப் பல்லக்குகளில் ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளுகின்றனா்.
அதன்படி கடந்த 2 நாள்களும் விமரிசையாக கல்யாண உற்சவம் நடந்தது. மேலும் அதன் நிறைவு நாளான திங்கள்கிழமை நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோற்சவ மண்டபத்தில் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் எழுந்தருளினா்.
அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்கியது. உற்சவமூா்த்திகளை அா்ச்சா்கள் வாயிலில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று, அவா்களை எதிரெதிா் அமர வைத்து பட்டு வஸ்திரம் சமா்பித்து, ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா். சடங்குகள் முடிவடைந்தவுடன், மாங்கல்தாரணம் நடந்த்தது. அதன் பின்னா் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னா் உற்சவமூா்த்திகள் அனைவரும் மீண்டும் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனா். பரிணய உற்சவத்தின் போது திருமலையில் வானவேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கோவிலில் வான வேடிக்கை நடத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீா்ப்பால் தேவஸ்தானம் அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
ரத்து
ஸ்ரீ பத்மாவதி பரிணயோற்சவத்தை முன்னிட்டு ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
திருமலையில் பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

