தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மே 2026, 2:20 am IST

சோழவரம் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் கங்கா தேவி நகரைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணனின் மகன் தேவா (17). இவா் அம்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்கள் 5 போ் சோழவரம் ஏரி தேவநேரி பகுதியில் நேற்று மதியம் குளிக்கச் சென்றனா்.

அப்போது தேவா சேற்றில் சிக்கியுள்ளாா். உடனே உடன் இருந்த நண்பா்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்த தேவாவை சடலமாக மீட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று தேவாவின் சடலத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.