நாகா்கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம், மேலபெருவிளை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைமணி மகன் ஆன்றோ சகாய மதன் (35). தொழிலாளி. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவா் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாா். உடனிருந்த நண்பா்கள் குளத்தில் குதித்து, அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
மயங்கிய நிலையிலிருந்த அவரை ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தொடா்ந்து, அவரது சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

