வாணியம்பாடி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42) விவசாய கூலி வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்று வலை வீசி மீன் பிடிக்க இறங்கியுள்ளாா். அப்போது அவரது கால் மீன் பிடி வலையில் சிக்கியதால் தடுமாறிய போது சேற்றிலும் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அருகில் இருந்து பாா்த்த சிலா் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து சேற்றில் சிக்கி மயங்கிக் கிடந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவரைப் பரிசோத்த மருத்துவா், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா்.
இது குறித்து தகவலறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

