தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே? என திமுகவினருக்கு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்து பேசி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அதற்காக சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பரவிக் கிடக்கிறது. நான் சொன்ன பிரச்னைகள் அனைத்தும் பல ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் விட்ட பிரச்னைகள்தான். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே...
எதிர்க்கட்சிகள் கேட்கும்போது அக்கறையாக தெரியவில்லை. அவதூறு அரசியலாகத்தான் தெரிகிறது. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளைப் போடலாம்.
கடந்த 11 மாத காலமாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு தற்போது விடையைக் கண்டுபிடிக்கிறோம்.
இதை ஆரம்ப நிலையிலேயே யார் கட்டுப்படுத்த வேண்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதனைச் செய்யாதது ஏன்?
எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க, விமர்சனம் செய்ய உரிமை உண்டு. எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்ததை யோசித்து பின்னர் நடுநிலையாகப் பேசினால் நன்றாக இருக்கும்" என்று பேசினார்.
Summary
CM vijay speech in TN Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் எவ்வளவு நேரம் பேசினார்?
நடிகராக இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை! 1990 முதல் மக்கள் பணி! விஜய் பேச்சு

பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!

சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
