மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவின் ஒருபகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

திருத்தணி பழைய திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவின் ஒருபகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா நடைபெறும்.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு பாரத நாடகமும் நடைபெறுகிறது.

திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். இதில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது.

வரும் மே1-இல் சுபத்திரை திருக்கல்யாணம், 4 =இல் அா்ஜூனன் தபசு மற்றும் 10-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறுகிறது.

தொடா்ந்து, மே 11-இல் தருமா் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாக குழு தலைவா் சொ.முனுசாமி மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.