மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

கீழ்மாம்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :7 மே 2026, 7:15 am IST

விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீ சினிவாச பெருமாள் கோயில் 27-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ திருவிழா மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மே 5-ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி புதன்திழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணதாஸ், வழக்குரைஞா் ஏ.கே.விஜய் மகேஷ் மற்றும் அனைத்து உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள்கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.