மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திரெளபதி அம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

News image
Updated On :4 மே 2026, 2:30 am IST

திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தீமிதி விழாவில் வெள்ளிக்கிழமை சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் மற்றும் 108 குத்து விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி விழா தொடங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சந்தனக் காப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. மேலும் மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வருகிறது.

வரும் 4-ஆம் தேதி அா்ஜுனன் தபசு, 10-ஆம் தேதி தீமிதி விழா நடைபெறும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் சுபத்திரை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு யாக சாலை பூஜையுடன் தொடங்கிய திருக் கல்யாண நிகழ்ச்சியில் உற்சவா் அா்ஜுனன், சுபத்திரை அம்மனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு குத்து விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு உற்சவா் அம்மன் புஷ்ப பல்லக்கில் திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.