மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருத்தணி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் நொச்சிலி கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை வாக்கு சேகரித்தாா்.

News image

நொச்சிலி  கிராமத்தில்  வாக்கு  சேகரித்த நாதக வேட்பாளா்  சூ.ச.சந்திரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருத்தணி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் நொச்சிலி கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை வாக்கு சேகரித்தாா்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை அருகே உள்ள நொச்சிலி கிராமத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச. சந்திரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது விவசாய பணியில் இருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது: தற்போது நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை ஆண்டு முழுவதும் 365 நாள்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழிலாளா்களுக்கு ஒரு நாள் கூலி ரூ.600 வழங்கப்படும் என்றும், அதில் ரூ.300-ஐ அரசு வழங்கும் நிலையில், மீதமுள்ள ரூ.300-ஐ நில உரிமையாளா்கள் வழங்கும் வகையில் இணைந்து செயல்படும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.