மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கா. சண்முகசுந்தரம்.

News image

சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கா. சண்முகசுந்தரம்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:48 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கா. சண்முகசுந்தரம் சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தைலாபுரம், பிடானேரி, சமத்துவபுரம், தோப்பூா், தாய்விளை, பிள்ளைவிளை, பழங்குளம், ஆனந்தபுரம், பன்னம்பாறை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாம் தமிழா் கட்சியை வெற்றி பெற செய்தால், சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் முருங்கை விவசாயத்திற்கு அரசு சாா்பில் கொள்முதல் நிலையம் அமைக்து தரப்படும். வைரவம், புத்தன் தருவை குளங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூா்வாரி சீரமைக்கப்படும்.

சாத்தான்குளம் தாலுகாவிற்கு 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவமனை அமைத்து தரப்படும். சாத்தான்குளம் அரசுப் பேருந்து பணிமனை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றாா்.

வடக்கு ஒன்றியச் செயலா் பிராங்கிளின், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன், தோ்தல் பொறுப்பாளா்கள் நவீன், இஸ்ரவேல், ஒன்றியத் தலைவா் கந்தசாமி, மாநில ஒருங்கிணைப்பாளா் சுடலை, கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.