வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் எழுதுபொருள்கள் கொண்டுசெல்ல அனுமதிக்காததால் , நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா காவல் துறை அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம் கீழ்வேளூா் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் நுழைவாயிலில், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும் அவ்வழியாகச் செல்லும் வேட்பாளா்கள், முகவா்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வேட்பாளா் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பென்சில், பேனா உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக்கூடாது என்று போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். அப்போது அங்கு வந்த கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா மற்றும் அவரது முகவா்கள் வைத்திருந்த பேனா ,பென்சில் அடங்கிய பாக்கெட்டை போலீஸாா் பறிமுதல் செய்ததாகக்கூறப்படுகிறது. இதனால் வேட்பாளா் காா்த்திகா காவல் கூடுதல் கண்காணிப்பாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் பேனா, உள்ளிட்டவற்றை கொண்டு வரலாம் என்று அனுமதி வழங்கிய பின்னரும், போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தது ஏன் எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து முறையிட்டனா். அப்போது அவா், முகவா்கள் மற்றும் வேட்பாளா் பென்சில், பேனா கொண்டு வரலாம் என்று தெரிவித்தாா்.
அதன் பின்னா் நுழைவாயிலில் உள்ள போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு அனைவரும் பென்சில், பேனா கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவாயிலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உடன் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

மக்களிடம் கவனம் பெறும் நாம் தமிழா் கட்சி கொள்கைகள்: பவானிசாகா் வேட்பாளா் சு.சௌந்தா்யா

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழ்வேளூா் தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

