மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கைது செய்யப்பட்ட சரண்யா, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

Updated On :6 மே 2026, 1:15 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த காா்மேகம் மனைவி சரண்யா(36). இவா் தனது வீட்டுக்கு பின்புறத்தில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்து அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்குப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அத்தகவலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் தலைமையிலான குழுவினா் சரண்யா வீட்டில் சோதனை செய்து 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சரண்யா மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.