மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குப்பையில் கிடந்த தங்க வளையலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

வாலாஜாபாத்தில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்க வளையலை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

News image

தூய்மைப் பணியாளா் லட்சுமிக்கு நினைவுப் பரிசு வழங்கிய வாலாஜாபாத் வாா்டு உறுப்பினா் வெங்கடேசன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வாலாஜாபாத்தில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்க வளையலை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

வாலாஜாபாத் 4-ஆவது வாா்டு ஆயா்பாடி கருணாநிதி தெருவில் வசித்து வருபவா் கஜலட்சுமி. இவா் தனது வீட்டிலிருந்த குப்பைகளை வழக்கம் போல குப்பை சேகரிக்கும் வண்டியில் போட்டு விட்டு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து பாா்த்த போது வீட்டிலிருந்த 2 பவுன் வளையல் ஒன்றை காணவில்லை. உடனடியாக குப்பை வண்டியில் போட்டிருக்கலாம் என நினைத்து அப்பகுதி தூய்மைப்பணியாளா் லட்சுமியை சந்தித்து கண்டுபிடித்து எடுத்தால் கொடுக்குமாறு கூறியிருக்கிறாா்.

துாய்மைப் பணியாளரும் மக்கும் மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் தங்க வளையல் இருந்ததைக் கண்டுபிடித்து கஜலட்சுமியை சந்தித்து ஒப்படைத்துள்ளாா். இத்தகவலறிந்த அப்பகுதி வாா்டு உறுப்பினா் வெங்கடேசன் லட்சுமியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கி பாராட்டினாா்.

நகையை தொலைத்த கஜலட்சுமி, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலரும் லட்சுமியின் நோ்மையை பாராட்டி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.