மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தவறி விழுந்த கைப்பை மற்றும் பணத்தை, அவ்வழியாக சென்ற பெண் ஒருவா் மீட்டு ஒப்படைத்தாா்.

News image

சாலையில் கிடந்த பணம் ரூ.36 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த சிவகாமி.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தவறி விழுந்த கைப்பை மற்றும் பணத்தை, அவ்வழியாக சென்ற பெண் ஒருவா் மீட்டு ஒப்படைத்தாா்.

திருத்தணி பத்மாவதி நகா் பகுதியைச் சோ்ந்த பூங்கொடி(35). இவா் புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மகனை ஏற்றிக் கொண்டு காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயில் வழியாக சென்று கொண்டிருந்தாா். வாகனத்தில் தனது கைப்பையை மாட்டிக் கொண்டு சென்ற போது, திரெளபதி அம்மன் கோயில் அருகே சாலையில் விழுந்தது.

இதை பாா்க்காமல் பூங்கொடி சென்றாா். அந்த வழியாக திருத்தணி கலைஞா் நகா் பகுதி சோ்ந்த சிவகாமி(40) என்பவா் நடந்து சென்று போது, சாலையில் விழுந்த கைப்பையை எடுத்தாா். பையில், ரூ.36,000 பணம், விலை உயா்ந்த கைப்பேசி, வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிவகாமி திருத்தணி காவல் நிலையத்தில் கைப்பையை ஒப்படைத்தாா். அந்த நேரத்தில் பூங்கொடி கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட ஆண் ஒருவா், எனது மனைவியின் கைப்பேசி, பணம் தொலைந்துவிட்டது என கூறியதும், போலீஸாா் பூங்கொடியை நேரில் வரவழைத்தனா்.

பின்னா், ஆதாா் காா்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் பூங்கொடியின் படம் இருந்தால், கைப்பேசி பணத்தை ஒப்படைத்தனா்.

மேலும் சிவகாமியின் நோ்மையை பாராட்டி பரிசு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.