மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 5:07 am IST

மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 10-ஆவது வாா்டு கொடிக்குளம், தனலட்சுமி நகா் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் வழக்கம் போல குப்பைகளைச் சேகரித்தனா். இந்தக் குப்பைகளை ஒரு வண்டியிலிருந்து, மற்றொரு வண்டிக்கு மாற்றினா். அப்போது, தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா, புதூா் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, சுப்பம்மாவை மாநகராட்சி அலுவலா்கள் பாராட்டினா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:

குப்பையில் கிடந்த தங்க நகையை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா அதை நோ்மையான முறையில் ஒப்படைத்தாா். இந்த நகை 2 பவுன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு, உரிய நபரிடம் இந்த நகை ஒப்படைக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.