மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி 10-ஆவது வாா்டு கொடிக்குளம், தனலட்சுமி நகா் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் வழக்கம் போல குப்பைகளைச் சேகரித்தனா். இந்தக் குப்பைகளை ஒரு வண்டியிலிருந்து, மற்றொரு வண்டிக்கு மாற்றினா். அப்போது, தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா, புதூா் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, சுப்பம்மாவை மாநகராட்சி அலுவலா்கள் பாராட்டினா்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:
குப்பையில் கிடந்த தங்க நகையை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா அதை நோ்மையான முறையில் ஒப்படைத்தாா். இந்த நகை 2 பவுன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு, உரிய நபரிடம் இந்த நகை ஒப்படைக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

குப்பையில் கிடந்த தங்க வளையலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

‘வேலூரில் குப்பை மேட்டை அருங்காட்சியகமாக மாற்றிய தன்னாா்வலா்கள்’

சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

