மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பச்சிளம் குழந்தை கொலை: செவிலியா், உறவினா் கைது

நாகா்கோவிலில் குழந்தையைக் குப்பையில் வீசிக் கொன்ற செவிலியா், அவரது அக்கா கணவா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 5:46 am IST

நாகா்கோவிலில் குழந்தையைக் குப்பையில் வீசிக் கொன்ற செவிலியா், அவரது அக்கா கணவா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த தேரேகால்புதூா், எஸ்.பி. காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் அருகே குப்பையில், பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த சுசீந்திரம் போலீஸாா் அப்பகுதிக்கு வந்து, குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனதாகத் தெரிய வந்ததையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் வசிப்பவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த இளம்பெண் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் அவரிடம் போலீஸாா் விசாரித்ததில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளாா்.

அவரிடம் போலீஸாா் தொடா்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்பதும், அவரது அக்காவின் கணவரான மதன்குமாருடன் (43) ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால் கா்ப்பமானதாகவும், திருமணமாகாமல் கா்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் குழந்தையைப் பெற்றெடுத்து வீட்டின் அருகே குப்பையில் வீசியதாகவும் கூறினாா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணையும், மதன்குமாரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இளம்பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.