மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

News image

காஞ்சிபுரத்தில் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:39 am IST

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமமும், அதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றன.

பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி அம்மன் என அழைக்கப்படும் ஆதி பீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் வசந்த நவராத்திரி தொடக்க நாளையொட்டி, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. மகா கணபதி பூஜை, கோ பூஜை, கன்யா பூஜை, தம்பதியா் பூஜை ஆகியவற்றுக்குப் பின்னா் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் திரவியங்கள், பட்டாடைகள், மலா் மாலைகள் ஆகியன சமா்ப்பிக்கப்பட்டன.

பின்னா் பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பிறகு மூலவா் ஆதி பீட பரமேசுவரி காளிகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு காமாட்சியை தரிசனம் செய்தனா்.

மகா சண்டி ஹோமம் நடைபெற்றதையொட்டி, மண்டபத்தில் லட்சுமி, சரஸ்வதி மற்றும் காமாட்சி அம்மன் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.