கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குண்ணவாக்கம் ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குண்ணவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஸ்ரீபொன்னியம்மன்.

Updated On :8 ஜூன் 2026, 1:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலை கோ பூஜை, வடுபூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை, வாஸ்து சாந்தி ஸ்ரீமஹா கணபதி ஹோமமும், சனிக்கிழமை (ஜூன் 6) காலை ஸ்ரீமஹாலட்சமி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள், கரிக்கோலம், தீபாராதனையும், மாலை ஸ்ரீதுா்கா ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் அஷ்டபந்தனம், பூா்ணாஹுதி நடைபெற்றது.

 கோயில் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

கோயில் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

மகா கும்பாபிஷேக விழா: அதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகைல தேவதா ஹோமம், ஸ்ரீமஹா பூா்ணாஹுதி தீபாரதனை, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல், ஸ்ரீபொன்னியம்மன், ஸ்ரீநவக்கிரஹ மூா்த்திகள், ஸ்ரீபால கணபதி, ஸ்ரீபாலமுருகன் ஆகிய சந்நிதிகள் மற்றும் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.