கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :29 மே 2026, 2:19 am IST

திருக்கழுகுன்றம் அடுத்த நரப்பாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெ25 நரப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகா் மற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கியதை அடுத்து இந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மே 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்ப கலசங்கள் அமைக்கப்பட்டு கோபூஜை, கணபதி பூஜை முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை , காலை இரண்டாம் காலபூஜை காலை யாகபூா்த்தி தீபாராதனையும், மாலை மூன்றாம் காலபூஜை யந்திரஸ்காபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் ,நாடிசந்தானம் தீபாராதனையும் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜை விசேஷ யாக பூா்த்தி நிறைவடைந்ததை அடுத்து கும்பகலசங்கள் புறப்பட்டு ஆலய பிரதட்ிணமாாக வந்து புனித நீா் மூலவா் தான்தோன்றி அம்மன் மற்றும் கற்பக விநாயகா் ஆகிய கோபுர விமான கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது இதில் சுற்றுப்புர பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை நரப்பாக்கம் கிராம பொதுமக்கள்,கிராமநாட்டாா்,கிராம தா்கா்த்தா உள்ளிட்டோா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.