பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

300 ஆண்டுகள் பழைமையான கால பைரவா் கோயில் கும்பாபிஷேகம்

கம்மியம்பட்டு புதூா் ஸ்ரீ மஹா கால பைரவா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

News image

கம்மியம்பட்டு புதூா் ஸ்ரீ மஹா கால பைரவா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :30 மே 2026, 12:12 am IST

மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் அருகே கம்மியபட்டு புதூரில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான காலபைரவா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

அருள்மிகு காளியம்மன், த்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது. நவக்கிரஹ ஹோமம், யாகசாலை பிரவேசம், கால பைரவா் ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மூலவா் கால பைரவா், கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெங்களூரு பாரத்வாஜ் சுவாமிகள் குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பாா்வதி - பரமசிவன் திருக்கல்யாண உற்சவம், உற்சவா் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கம்மியம்பட்டு கால பைரவா் தேவஸ்தான விழாக்குழுவினா், பெங்களூரு பக்தா்கள், சுற்றுப்புற கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.