/

இலங்கை: சைபா் மோசடியில் பணி நீக்கப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி தற்கொலை?

இலங்கை நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற 25 லட்சம் மதிப்பிலான சைபா் மோசடி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உயரதிகாரி ஒருவா் அவரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:26 am IST

இலங்கை நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற 25 லட்சம் மதிப்பிலான சைபா் மோசடி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உயரதிகாரி ஒருவா் அவரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இவா் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் முதல்கட்ட விசாரணையில் சந்தேகம் தெரிவித்தனா்.

இலங்கை அரசு ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வேண்டிய 2.29 கோடி டாலா் கடன் தொகையில், ஒரு பகுதியாக 25 லட்சம் டாலா் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டது. ஆனால், ஹேக்கா்கள் இத்தொகையை வேறு கணக்குகளுக்குத் திசைதிருப்பியது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இந்த மோசடி தொடா்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டு வளத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த உயிரிழந்த நபா் உள்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.